Saturday, December 12, 2020

Hello

 ஒகே மக்களே... 

வெல்கம் ஹோம்!

நிறைய நிறைய காலத்துக்கு உங்களோடு பேச வேண்டும் என்று தான் எழுதுகிறேன்.

என்னுடைய பழைய வெப்சைட்டை என் கவலையீனத்தால்  ரினியூ செய்ய மறந்து  போய் அதை இழக்க வேண்டி வந்து விட்டது. பெரும்பாலும் பாதியில் விட்ட கதைகளை நான் பத்திரமாக சேமித்து வைக்காமல் அங்கேயே டிராப்ட் மோடில் வைத்திருந்தேன். எல்லாம் போய் விட்டது. இனிமேல் மறுபடி எப்படி டைப் செய்வது போடாங் என்று எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு போய் விட்டேன். 

ஆனாலும் இந்த வருஷம் எதுவுமே எழுதவில்லையே என்ற ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது . ஆசையாக ஆரம்பித்த எதையும் முடிக்க முடியாமல் விதி சதி செய்தாலும் டிசம்பர் முப்பதுக்கு முதல் சிம்பிளாக முடிக்க கூடிய ஏதும் சிக்குமா என்று தேடிக்கொண்டே இருந்தேன். போன வருஷம் மனதில் இருந்த கதை ஒன்று ஞாபகம் வந்து விட்டது. ஆகவே உங்களுக்கு ஒவ்வொரு நாளும் டெய்லி பதிவுகளில் இரவுகளில் வரும். 31/12/ 2020 முன்னர் முடித்து விடுவேன். Don't Worry!

இந்த சைட்டில் அப்டேட்டுகள், என்னுடைய உளறல்களை தவிர எதுவும் இருக்காது. என்னை பொறுத்தவரை என்னுடைய ப்ளாக்கும் பேஜும் எனக்கான comfort zone ஆக இருந்தது. ஆனால் என்னுடைய பேஜில் இப்போதெல்லாம் அந்த உணர்வு வரமாட்டேன் என்கிறது. அங்கே பேசும் போது ஆயிரம் கண்கள் என்னை மதிப்பிட்டு கொண்டு இருப்பதை போல உணர்வு வருகிறது. அங்கே போஸ்ட் செய்யா விட்டால் பலரை சென்றடையாது தான், புரிகிறது ஆனால் நான் நானாக comfort ஆக இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம் என்று நினைக்கிறேன். ஆகவே முதல் தடவையாக போஸ்ட் செய்வதனால் உங்களுக்கு நான் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தல் கொடுத்தேன். மற்றபடிக்கு ஒவ்வொரு பதிவும் அங்கே லிங்க் கொடுக்க மாட்டேன். தயவு செய்து புரிந்து கொண்டு  என்னை தொடர விரும்பினால் இங்கே follow செய்யுங்கள். 

என் வாசகர்களுக்கு 

நீங்களும் இங்கே உங்கள் வீட்டில் இருக்கும் சௌகர்யத்துடன் வந்து போக முடியவேண்டும்  என்று தான் இந்த பெயரே வைத்தேன். ஆக தயங்காமல் என்னை திட்டலாம், 

பாராட்டுக்கள் மட்டுமே சொல்வது ஒரு வழி தொடர்பாடல் மக்களே.. உங்கள் கருத்தை ஓபன் ஆக சொல்லுங்கள். என்னுடைய கதைகளுக்கு என்னை விட மோசமான, கறாரான  விமர்சகராக உங்களால் இருந்து விடவே முடியாது.

நான் இங்கே மட்டும் இயங்குவது , மற்றும் பொது வெளியில் இயங்காமலிருப்பது நீங்கள் என்னை தொடர்பு கொள்வது பிடிக்காமல் இல்லை என்பதை தயவு செய்து மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னை முகப்புத்தகம் வழியாகவோ, ஈமெயில் வழியாகவோ தயங்காமல் அணுகலாம்.  இடைப்பட்ட காலத்தில் பல வாசகிகள் அப்படி நினைத்ததாக சொன்னார்கள். :D 

என் ஈமெயில் முகவரி : ushanthygowthaman@gmail.com

அப்புறம்வேறென்ன? 

I love you all மக்களே... உங்களுடனான இடையீடுகளை ரொம்பவும் மிஸ் செய்தேன்.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சகோ...வாங்க வாங்க,நலம்தானே... கதை முடிக்காம காணாம போய்டா அப்புறம் 'happy new year'னு வாழ்த்தவே மாட்டோம் ஆமா...

    LOVE YOU அன்பு எழுத்தாளரே..WELCOME HOME(BACK(with a bang))

    ReplyDelete
    Replies
    1. No worries. I want to finish somehow before 31st :D Yes yes. Hope you and your family are also doing well.

      Delete
  3. Hi Usha
    Romba naal ungala kanon nu apa apa blog, fb page nu suthi pathute irunthen.. last uh neenga fb la msg patta aprum daily unga fb page uh visit panrathu enoda daily duty mathi aagi pochi.. unga stories ellam romba miss panren sis.. apa apa etha particular scene thonum odi poi open panni andha chapter uh again padikurathu chinna santhosam.. waiting to read ur stories..

    ReplyDelete
    Replies
    1. Hi! I am very happy to hear from you guys too. romba naal wait panna vachathuku sorry. Thnak you sooooooo much. It means so much to me <3

      Delete
  4. Hi Usha,
    Welcome back.Very Happy to see you again.Wishes for your new story.

    ReplyDelete

அகம் முழுக்கதை

 ஹாய் மக்கள்ஸ்..  இங்கே அகம் முழுக்கதையை படிக்கலாம்.  https://drive.google.com/file/d/1F2OeFSh-OyvsYKjmqq8N1BVfpVGPYWTm/view?usp=sharing இரண...